மில்க் கேட்-சாலையைக் கடக்க முயன்ற முதியவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழப்பு.
மில்க் கேட்-சாலையைக் கடக்க முயன்ற முதியவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழப்பு. கரூர்-கோவை சாலையில் மில்கேட் பஸ் ஸ்டாப் அருகே வியாழக்கிழமை அதிகாலை 2 :45 மணி அளவில் அப்பகுதியில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்த அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க முதியவர் சாலையை நடந்து கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் முதியவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முதியவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். சம்பவம் குறித்து ஆண்டாங் கோவில் கீழ்பாகம் விஏஓ மணிவண்ணன் அளித்த புகாரில் கரூர் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கரூர்-கோவை சாலையில் மில்கேட் பஸ் ஸ்டாப் அருகே வியாழக்கிழமை அதிகாலை 2 :45 மணி அளவில் அப்பகுதியில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்த அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க முதியவர் சாலையை நடந்து கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் முதியவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முதியவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். சம்பவம் குறித்து ஆண்டாங் கோவில் கீழ்பாகம் விஏஓ மணிவண்ணன் அளித்த புகாரில் கரூர் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story




