போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட முதியவருக்கு ஆயுள் தண்டனை

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட முதியவருக்கு ஆயுள் தண்டனை
X
ஒட்டன்சத்திரத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட முதியவருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 1 ஆண்டு சிறை, ரூ.11 ஆயிரம் அபராதம்
திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2022-ம் ஆண்டு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் சுரைக்காய்பட்டியை சேர்ந்த ராமர்(60) என்பவரை ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் இன்று நீதிபதி அவர்கள், ராமருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 1 ஆண்டு சிறை தண்டனை, ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
Next Story