சுரண்டை அரசு கல்லூரியில் தமிழ்க்கனவு நிகழ்ச்சி நடைபெற்றது

சுரண்டை அரசு கல்லூரியில் தமிழ்க்கனவு நிகழ்ச்சி நடைபெற்றது
X
அரசு கல்லூரியில் தமிழ்க்கனவு நிகழ்ச்சி நடைபெற்றது
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டை காமராஜர் அரசு கலை கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் சீ. ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். தென்காசி கோட்டாட்சியர் வைஷ்ணவி பால் முன்னிலை வகித்தார். இதில் சுரண்டை காமராஜர் அரசு கல்லூரி முதல்வர் முனைவர் கே.பி. கணேசன், ஆலங்குளம் அரசு கலை கல்லூரி முதல்வர் முனைவர் சிவசங்கரி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
Next Story