பட்டாசு ஆலையில் பயங்கர தீவிபத்து - ஒருவர் சடலமாக மீட்பு

பட்டாசு ஆலையில் பயங்கர தீவிபத்து - ஒருவர் சடலமாக மீட்பு
X
கோவில்பட்டி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர தீவிபத்து - ஒருவர் சடலமாக மீட்பு - அருகில் இருந்த கோழிப்பண்ணையும் எரிந்து நாசம்
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே கருப்பூர் கிராமத்தில் கண்ணபிரான் என்பவருக்கு சொந்தமான ஜாஸ்மின் என்ற பெயரில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது இங்கு. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இன்று மாலை 3 மணியளவில் பட்டாசு ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பட்டாசு ஆலை முழுவதும் சேதம் அடைந்து தரைமட்டமானது. பட்டாசு ஆலையில் வேலை பார்த்த தொழிலாளர்கள் அங்கிருந்து சிதறி ஓடினர். பட்டாசு ஆலையின் அருகே இயங்கி வந்த கோழிப்பண்ணை முற்றிலும் தீயில் கருகி சேதம் அடைந்தது. இந்த தீ விபத்தில் இருந்து தப்பிப்பதற்காக 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஓடி வந்த போது இரும்பு கம்பி வேலிகளில் சிக்கி உடல் கருகி உயிரிழந்து கிடந்தார். அவரது சடலத்தை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவ இடத்தில் கோவில்பட்டி விளாத்திகுளம் சாத்தூர் தீயணைப்பு நிலைய வாகனங்களும் வீரர்களும் வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story