குமரி : கோர்ட்டுக்கு சென்றவர் பைக் விபத்தில் உயிரிழப்பு

X
குமரி மாவட்டம் வெள்ளிமலை பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம் (32). இவர் நேற்று ஒரு வழக்கு சம்பந்தமாக இரணியல் கோர்ட்டுக்கு சென்று விட்டு, வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். முட்டம் செல்லும் சாலையில் செல்லும்போது, அவரது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியது. இதில் கீழே விழுந்த அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனே அவரை குமரி அரசு மருத்துவம் கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

