பெரம்பலூர் மாவட்ட மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளையும், அரசின் திட்டங்களையும் உடனுக்குடன் நிறைவேற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்

X
பெரம்பலூர் மாவட்ட மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளையும், அரசின் திட்டங்களையும் உடனுக்குடன் நிறைவேற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் - பெரம்பலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தகவல் பெரம்பலூர் மாவட்டத்தின் ஆட்சித்தலைவராக இருந்த திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள், சர்க்கரை துறையின் இயக்குநகரத்தில் கூடுதல் இயக்குநராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு, பெரம்பலூர் மாவட்டத்திற்கு திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் புதிய ஆட்சித்தலைவராக தமிழக அரசால் நியமிக்கப்பட்டார். மாவட்ட ஆட்சித்தலைவராக ந.மிருணாளினி இன்று (30.08.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும், கடைகோடி மக்களுக்கும் கொண்டு சேர்ப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். பெரம்பலூர் மாவட்ட மக்களின் கோரிக்கைக தேவைகள்,கோரிக்கைகளும் உடனுக்குடன் தீர்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளப்படும். பெரம்பலூரில் பணியாற்றவுள்ளதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு தெரிவித்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையித்தின் மூலம் நடத்தப்பட்ட தொகுதி-1 தேர்வில் தேர்ச்சிப்பெற்று 2001-ஆம் ஆண்டு கூட்டுறவுத்துறையில் துணைப்பதிவாளர் (கூட்டுறவுத்துறை)-ஆக பணிநியமனம் பெற்றார். பின்னர் இணைப்பதிவாளர் நிலையில் புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் பணிப்புரிந்தும் சென்னையில் கூடுதல் பதிவாளராக பணிப்புரிந்தார். 2023-ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணிக்கு பதவி உயர்வு பெற்று காஞ்சிப்புரம் மாவட்டத்தில் இந்திய ஆட்சிப் பணிக்கான பயிற்சியினை மேற்கொண்டு, ஸ்ரீபெரும்புதூர் சார் ஆட்சியராக பதவி வகித்து தற்போது பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக 30.08.2025-இன்று பணியேற்றுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மு. வடிவேல் பிரபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.ச.வைத்தியநாதன் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் மாவட்ட ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story

