சேலத்தில் கட்டிட பணியின் போது தவறி விழுந்த தொழிலாளி சாவு

X
சேலம் சன்னியாசிகுண்டு பாத்திமா நகரை சேர்ந்தவர் ஜான் பாட்ஷா. தொழிலாளி. இவர் கடந்த 25-ந் தேதி மாரியம்மன் கோவில் அருகே உள்ள கலைச்செல்வி என்பவர் புதிதாக கட்டி வரும் வீட்டின் முதல் மாடியில் கம்பி கட்டும் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஜான் பாட்ஷா 11 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு ஜான் பாட்ஷா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

