போச்சம்பள்ளி பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் விநாயர் சிலைகள் கரைப்பு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள வேடிக்கொட்டாய் கிராமத்தில் 10 அடியில் வெற்றி விநாயகர் சிலை வைத்து கடந்த 5 நாட்களாக காலை, மாலை கொல்லுகட்டை, பழங்கள், பொரி கடலை வைத்து பூஜை செய்து பொது மக்கள் வழிபட்டனர். இன்று பூஜிக்கபட்ட விநாயர் சிலையை மேளதாளங்களுடன் ஊர்வலமாக ஊர் பொதுமக்கள் எடுத்து சென்று அகரம் தென்பெண்ணை ஆற்றில் கரைத்தனர். அதேபோல் அரசம்பட்டி, மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் 100க்கணக்கான விநாயகர் சிலைகள் கரைக்கபட்டது.
Next Story

