கோவை: யானை தாக்கி மருத்துவமனையில் உள்ள முதியவரை சந்தித்தார் வேலுமணி !

கோவை: யானை தாக்கி மருத்துவமனையில் உள்ள முதியவரை சந்தித்தார் வேலுமணி !
X
தொண்டாமுத்தூர் பகுதியில் நடை பயிற்சி சென்ற முதியவரை யானை தாக்கி படுகாயம் அடைந்தார்.
கோவை, தொண்டாமுத்தூர் அருகே நரசிபுரம் வெள்ளிமலை பகுதியில் 90 வயது பத்ரகிரி என்பவரை காட்டு யானை தாக்கி இரு கால்களிலும் பலத்த காயம் அடைந்தார். அங்கு வந்த யானையை வனத்திற்குள் விரட்டிய பொதுமக்கள் பத்திரிகிரியை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கால்களை இழந்து கங்கா மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள பத்திரிகிரியை சந்தித்து, எம்.எல்.ஏ எஸ்.பி வேலுமணி இன்று ஆறுதல் தெரிவித்தார்.
Next Story