வால்பாறை அருகே அரசு பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்து சாலை மறியல் போராட்டம் !

X
வால்பாறை அருகே உவாசி எஸ்டேட், பத்தாம் பாத்தி பகுதிக்கு அரசு பேருந்து இயக்கப்படவில்லை என்பதால் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், அப்பகுதியில் சென்ற அரசு பேருந்தை சிறைபிடித்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர். பின்னர் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று பொதுமக்களுடன் பேசிச் சமரசம் செய்து போராட்டத்தை கைவிட வைத்தனர்.
Next Story

