தேசிய கைப்பந்து போட்டிக்கு காஞ்சிபுரம் மாணவி தேர்வு

தேசிய கைப்பந்து போட்டிக்கு காஞ்சிபுரம் மாணவி தேர்வு
X
தமிழக கைப்பந்து அணி சார்பில் வாலாஜாபாத் அகத்தியா மேட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி வர்ஷிகா கைப்பந்து சங்கத்தினர் தேர்வு செய்துள்ளனர்
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில், 17வது தேசிய அளவிலான கைப்பந்து போட்டிகள் செப்., 26ம் தேதி துவங்கி, செப்., 29ல் நிறைவு பெற உள்ளது. தமிழக கைப்பந்து அணி சார்பில், காஞ்சி புரம் மாவட்டம், வாலாஜாபாத் அகத்தியா மேட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி வர்ஷிகா என்பவரை, கைப்பந்து சங்கத்தினர் தேர்வு செய்துள்ளனர். தேசிய அளவிலான கைப்பந்து போட்டிக்கு தேர்வாகி இருக்கும் பள்ளி மாணவிக்கு, வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகி அஜய்குமார் வாழ்த்து தெரிவித்தார்.
Next Story