விஷம் குடித்து ஒருவர் தற்கொலை

விஷம் குடித்து ஒருவர் தற்கொலை
X
மதுரை பேரையூரில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்
மதுரை மாவட்டம் பேரையூர் வன்னி வேலம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த திருப்பதியின் மகன் பரமன் (55) என்பவர் குடிப்பழக்கத்திற்கு ஆளானதால் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி காலை வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்த வரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.நேற்று (செப்.1) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி பிச்சையம்மாள் டி கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் .போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story