மாணவியர் விடுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

X
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள சமூக நீதி பள்ளி மாணவியர் விடுதியில் அடிப்படை வசதி மற்றும் உணவு பொருட்களின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் இன்று (செப்டம்பர் 2) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அங்குள்ள அலுவலர்களிடம் பல்வேறு கலந்துரையாடல் நடத்தி ஆலோசனைகளை கலெக்டர் வழங்கினார். இந்த ஆய்வின்போது அதிகாரிகள், அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Next Story

