பைக் ஓட்டிய சிறுவன் தந்தை மீது வழக்கு

X
குமரி மாவட்டம் இரணியல் போலீசார் இன்று இரணியல் சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிவேகமாக பைக்கில் வந்த சிறுவனை நிறுத்தி விசாரணை செய்தபோது, அவர் தர்மபுபுரம் என்ற பகுதி சேர்ந்த 16 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. போலீசார் வாகனத்தை கைப்பற்றி இரணியல் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று, சிறுவனின் தந்தை சிவாசெல்வம் (42) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
Next Story

