தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கு விருது!

X
தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும், தமிழ்நாடு மெர்க்கன்டைல் 100 ஆண்டுகளுக்கும் மேலான சிறந்த சேவையுடன், இந்தியாவின் மிகவும் நம்பகமான தனியார் வங்கிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சொத்து தரம் (Asset Quality), லாபத்திறன் (Profitability), மற்றும் அபாய மேலாண்மை (Risk Management) ஆகிய துறைகளில் வெளிப்படுத்திய சிறப்பான செயல்திறனை அங்கீகரித்து, டெல்லியில் நடைபெற்ற Indian Chamber of Commerce நடத்திய 3வது எமெர்ஜிங் ஏசியா வங்கி மாநாடு மற்றும் விருதுகள் விழா - 2025 இல் கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனை குறித்து கருத்து தெரிவித்த வங்கியின் மேலாண்மை குழு, தனது அர்ப்பணிப்புடன் செயல்படும் பணியாளர்கள் மற்றும் நம்பிக்கையான வாடிக்கையாளர்களுக்கு நன்றியைத் தெரிவித்தது. "இந்த விருது எங்கள் நிலையான வளர்ச்சியும் வாடிக்கையாளர் நம்பிக்கையும் குறித்த உறுதியான கவனத்தை பிரதிபலிக்கிறது. இந்த வேகத்தை தொடர்ந்தும் மேம்படுத்தி, வங்கி துறையில் மிக உயர்ந்த தரநிலைகளைப் பின்பற்றுவோம்" என வங்கி தெரிவித்துள்ளது. Indian Chamber of Commerce ஏற்பாடு செய்யும் எமெர்ஜிங் ஏசியா வங்கி மாநாடு மற்றும் விருதுகள் விழா என்பது ஆசியா முழுவதும் வங்கி துறையில் சிறப்பையும் புதுமையையும் கொண்டாடும் ஒரு மதிப்புமிக்க தளம் ஆகும். வங்கி இந்த அங்கீகாரம், TMB வங்கியின் நேர்மையான நடைமுறைகள், வலுவான அபாய மேலாண்மை மற்றும் தொடர்ந்து நிலைத்த லாபம் ஆகியவற்றின் மீது கொண்ட உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது. இது இந்திய வங்கி துறையில் புதிய சிறப்புத் தரங்களை அமைத்துள்ளது. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஒரு பெயர் பெற்ற பழைமையான தனியார் துறை வங்கியாகும். தூத்துக்குடியை தலைமை அலுவலகமாக கொண்டு இயங்கிவரும் இந்த வங்கி நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர் சேவையிலும் அதன் கோட்பாடுகள் மற்றும் வரைமுறைகளிலும் போற்றுதலுக்குரிய சரித்திரம் படைத்து வருவதோடு, தொடர்ந்து இலாபம் ஈட்டியும் வருகிறது. இந்த வங்கியானது, இந்தியா முழுவதிலும் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 588 கிளைகள் மற்றும் 12 மண்டல அலுவலகங்களை கொண்டு சுமார் 53 லட்சத்துக்கும் மேலான வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவை ஆற்றி வருகிறது.
Next Story

