வேட்டைக்கார குப்பம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

X
செங்கல்பட்டு மாவட்டம், லத்தூர் ஊராட்சி ஒன்றியம் வேட்டைக்கார குப்பம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ஒன்றிய பெருந்தலைவர் சாந்தி ராமச்சந்திரன் தலைமையில் ஒன்றிய கழகச் செயலாளர் கார்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர், பனையூர் மு.பாபு, ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன் ஆகியோர் கலந்துகொண்டு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை குத்துவிளக்கு ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்த முகாமில் வருவாய்த்துறை, மின்சாரத்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர். இந்த கோரிக்கை மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும் என அதிகாரிகள் பொது மக்களிடம் தெரிவித்தனர்.
Next Story

