சொக்கநாத சுவாமி திருக்கோயில் ஆவணி பெருந்திருவிழா திருத்தேரோட்டத்தை மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்

X
விருதுநகர்-800 ஆண்டுகள் பழமையான அருள்மிகு மீனாட்சி உடனுறை ஸ்ரீ சொக்கநாத சுவாமி திருக்கோயில் ஆவணி பெருந்திருவிழா திருத்தேரோட்டத்தை மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார் விருதுநகரில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான800 ஆண்டுகள் பழமையான அருள்மிகு மீனாட்சி உடனுறை ஸ்ரீ சொக்கநாத சுவாமி திருக்கோயில் உள்ளது.இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருவிழா சிறப்பாக நடைபெறும்.இந்த ஆண்டும் இத்திருவிழா கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.அதை தொடர்ந்து நாள்தோறும் மீனாட்சி சொக்கநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.நேற்று திருக்கல்யாணம் நடைபெற்ற நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது.முன்னதாக இன்று அதிகாலை திருத்தேரில் மீனாட்சி சொக்கநாதர் எழுந்தருள திருத்தேரை மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே. கே. எஸ் . எஸ்.ஆர் .ராமச்சந்திரன் வடம் பிடித்து இழுக்க ஏராளமான பக்தர்கள் தேரை இழுத்தனர்.நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்த தேர் மீண்டும் நிலையை அடைந்தது. நிகழ்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராமதிலகம் ஏற்பாடு செய்திருந்தார்.
Next Story

