சிறுவன் கொலை : குற்றவாளி தொடர் தலை மறைவு

X
கன்னியாகுமரி அருகே தோப்பூர் பகுதியை சேர்ந்த செல்வமதன் (36) டிரைவர். இவரது 2வது மனைவி செல்வி. செல்விக்கு அபிநவ் (5) என்ற முதல் கணவருக்கு பிறந்த மகனும், மேலும் செல்வமதனுக்கு பிறந்த ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை உண்டு. செல்வி வீட்டை விட்டு பிரிந்து சென்றதால் போதையில் வந்த செல்வ மதன் 5வயது சிறுவனை கொலை செய்துள்ளார். உடல் அழகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில், அவர் புதுச்சேரி, கர்நாடகா என பல மாநிலங்களை கடந்து செல்வதாக தெரிய வந்துள்ளது. மேலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story

