பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய எம் எல் ஏ

X
செங்கல்பட்டு மாவட்டம், குண்ணவாக்கம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைப்பெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் தொடக்கி வைத்தார். இதில் மக்களிடம் கோரிக்கை விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவைகளுக்கான தீர்வுகள் தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு,பட்டா, கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டசத்து பெட்டகம், முதியோருக்கு மருத்துவ பெட்டகங்கள் முதலியவற்றை பயனாளிகளுக்கு வழங்கினார். உடன் காட்டாங்கொளத்தூர் மத்திய மற்றும் தெற்கு ஒன்றிய செயலாளர்கள் கே.பி.இராஜன், ஆப்பூர் சந்தானம், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன்,ஊராட்சி மன்ற தலைவர் சத்யா ,ஒன்றிய கவுன்சிலர்,துணைத்தலைவர்,துறை சார்ந்தஅதிகாரிகள், ஊழியர்கள், கழக நிர்வாகிகள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.
Next Story

