கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் சுவாமி தரிசனம்

X
அருள்மிகு ஸ்ரீ கங்கை அம்மன் ஆலயம் ஸ்ரீ அய்யனார் ஆலயம் ஸ்ரீ சப்த கன்னியர் ஆலயம் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த தண்டலம் பகுதியில் அருள்மிகு கங்கை அம்மன் ஆலயம், ஶ்ரீ அய்யனார் ஆலயம், ஸ்ரீ சப்த கன்னியர் ஆலயம் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமத்தையாக நடைபெற்றதுநடைபெற்றது. சிவாச்சாரியார்கள் மூன்று நாட்கள் முன்னதாகவே யாக சாலைகள் அமைத்து கணபதி பூஜை, கோ பூஜை, லஷ்மி ஓமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு கிராம பொதுமக்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்பட்டு கோவி வளாகத்தை சுற்றி வந்து கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story

