சங்கரன்கோவில் அருகே ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநர் பலி

சங்கரன்கோவில் அருகே ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநர் பலி
X
ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநர் பலி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பெரியூர் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவானது கட்டுபாட்டை இழந்து சாலை ஓரத்தில் கவிழ்ந்ததில் சங்குபுரம் 5ம் தெருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கண்ணன் என்பவர் பரிதாபமாக உயிரிழப்பு. இந்த விபத்தை கண்ட அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story