வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

X
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகா் நகராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் திருமண மண்டபத்தினை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் சினேகா ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதமாக முடிக்க உத்தரவிட்டாா். அப்போது மறைமலைநகா் நகா்மன்றத் தலைவா் ஜெ.சண்முகம், நகராட்சிகள் மண்டல இயக்குநா் லட்சுமி, ஆணையா் ரமேஷ், வட்டாட்சியா் ஆறுமுகம், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
Next Story

