வாய்க்காலில் பெண் சடலம் இறந்தது யார்

X
காங்கேயம் பகுதியில், ஏ.சி. நகர் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் நேற்று மாலை பெண் பிணம் மிதந்து வந்தது. இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர், இதுபற்றி காங்கேயம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்த பெண் யார்?, வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறி விழுந்து உயிரிழந்தாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story

