கன்னியாகுமரி படகு போக்குவரத்து துவங்கியது

X
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடி பாலத்தை தினமும் ஏரான மான சுற்றுலா பயணிகள் படகில்சென்று பார்த்து வருகிறார்கள். இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப் படுகின்றன. இதில் பொதிகை படகு பழுதடைந்ததால் கடந்த மாதம் 1-ந் தேதி சின்னமுட்டம் துறை முகத்துக்கு கொண்டு சென்று கரையேற்றி சீர மைப்பு பணி நடைபெற்றது.ரூ.10 லட்சம் செலவில் நடைபெற்ற சீரமைப்பு பணி ஒரு மாதத்தில் முடிக்கப்பட்டு நேற்று கடலில் இறக்கப்பட்டது. அதன்பிறகு கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்கு வரத்து கழக படகு துறைக்கு கொண்டு வரப்பட்டது அந்த படகு கடலில் வெள்ளோட்டம் விடப்பட்டு சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. ஓணம் பண்டிகைதொடர் விடுமுறையை யொட்டி இன்று முதல் சுற்றுலா பயணிகள் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபம் திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடி பாலத்தை பார்வையிட்டனர்.
Next Story

