தொண்டர்களின் எண்ணத்தையே செங்கோட்டையன்  வெளிப்படுத்தியுள்ளார் :- ஆர்.வைத்திலிங்கம் எம்.எல்.ஏ 

தொண்டர்களின் எண்ணத்தையே செங்கோட்டையன்  வெளிப்படுத்தியுள்ளார் :- ஆர்.வைத்திலிங்கம் எம்.எல்.ஏ 
X
அரசியல்
தஞ்சாவூரில், வெள்ளிக்கிழமையன்று  ஓ.பன்னீர்செல்வம்  ஆதரவாளரும், ஒரத்தநாடு எம்எல்ஏவுமான ஆர்.வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது,  "எம்ஜிஆர், ஜெயலலிதாவிடம் நன்மதிப்பைப் பெற்றவர் செங்கோட்டையன். அவர் இன்று அ.தி.மு.க வில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று தனது எண்ணத்தை தெரிவித்துள்ளார். அனைத்து தொண்டர்களின் எண்ணத்தையே வெளிப்படுத்தி உள்ளார். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் கருத்தை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன். எல்லோரும்  ஒன்றிணைந்தால் மட்டுமே எம்ஜிஆர் , ஜெயலலிதா  ஆட்சியை கொண்டுவர முடியும். ஒன்றிணைப்பு குழு என்பது குறித்து எனக்கு இன்றைக்கு தான் தெரிய வந்துள்ளது. எங்களிடம் செங்கோட்டையன் தொடர்பில் இல்லை. அவர் எடப்பாடி பழனிச்சாமி அணியில் உள்ளார். அவருக்கு ஆதரவு அதிகமாக இருக்கிறது என்பது தெரிய வருகிறது. அவருடைய எண்ணம் போல் எல்லா தொண்டர்களும் விரும்புகிறார்கள். நிச்சயமாக எல்லோரும் அதை வரவேற்பார்கள். 10 நாள் கெடு கொடுத்திருக்கார். இல்லை என்றால் இணைப்பதற்கான முயற்சியை அவர் மேற்கொள்ளவார் என்பது அர்த்தம். பத்து நாள் கெடு முடிந்தவுடன் எனது கருத்தை நான் தெரிவித்துக் கொள்கிறேன். கட்சி சார்பு இல்லாத பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என நினைக்கிறார்கள். அ.தி.மு.க மீது தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்கள். அதை இணைப்பதற்கு தடையாக இருப்பவர்கள் மீது கோபமாகவும் இருக்கிறார்கள். சசிகலாவை சந்தித்து செங்கோட்டையன் பேசினாரா என்பது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்.
Next Story