போதைக்கு எதிரான மாராத்தான் தொடர் ஓட்டம்

போதைக்கு எதிரான மாராத்தான் தொடர் ஓட்டம்
X
கன்னியாகுமரி
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கிராம வளர்ச்சி மையம் மற்றும் அருமநல்லூர் ஊராட்சி மக்கள் இணைந்து நடத்திய போதைப்பழக்கத்திற்கு எதிரான மாராத்தான் தொடர் ஓட்டம் நேற்று குமரி மாவட்டம், திட்டுவிளை சந்திப்பு முதல் அருநல்லூர் வரை நடைபெற்றது. இதனை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான  என்.தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் தெரிவிக்கையில்:- முற்றிலும் போதைப் பொருட்கள் ஒழிக்கப்பட வேண்டும். இதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என அவர் கூறினார்.  இந்நிகழ்ச்சியில் தோவாளை வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் பொன்.சுந்தர்நாத், தோவாளை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் முத்துக்குமார், கழக வழக்கறிஞர் ஷாஜகான், ராஜேந்திரன், முகமது ராபீக், தோவாளை வடக்கு ஒன்றிய கழகப் பொருளாளர் வெங்கடேஷ், கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி மலேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story