ஆரோக்கியபுரம்   கடல் பகுதியில் ஆண் பிணம்

ஆரோக்கியபுரம்   கடல் பகுதியில் ஆண் பிணம்
X
கன்னியாகுமரி
கன்னியாகுமரியை அடுத்த ஆரோக்கியபுரம்   கடல் பகுதியில் ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக ஆரோக்கிய புரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கண்டனர். தொடர்ந்து, ஒரு வள்ளம் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் படகில் சென்று சடலத்தை மீட்டு சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகம் கொண்டு வந்தனர். இறந்த நபர் குறித்து விசாரித்த போது, இறந்தவர் ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த பெர்க்மான்ஸ் (வயது63) என்பது தெரியவந்தது. கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து அவர் எப்படி இறந்தார்? கடலில் தவறி விழுந்து இறந்தாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story