ஆவணி மாத பொளர்ணமியை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம்.*

ஆவணி மாத பொளர்ணமியை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம்  சதுரகிரி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம்.*
X
ஆவணி மாத பொளர்ணமியை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம்.*
ஆவணி மாத பொளர்ணமியை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம். விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். இந்த கோயில் ஆனது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்குச் சென்றால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்பதால் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.இந்த கோயிலுக்கு தற்பொழுது தினந்தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு இன்று சதுரகிரி கோவிலுக்கு விருதுநகர் , மதுரை ,தேனி ,திண்டுக்கல் திருச்சி சென்னை உள்ளிட்ட பல்வேறு கோயில் இருந்து வருகை தந்த பக்தர்கள் சதுரகிரி கோயிலில் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்தனர் . காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி எனவும், பக்தர்கள் கோயில் மலைப்பகுதியில் இரவில் தங்குவதற்கு அனுமதி கிடையாது எனவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story