பரமத்தி- டூவீலரின் பின்னால் கார் மோதி விபத்து.முதியவர் உயிரிழப்பு.
பரமத்தி- டூவீலரின் பின்னால் கார் மோதி விபத்து.முதியவர் உயிரிழப்பு. திருவாரூர் மாவட்டம் பைங்கா நாடு மேற்கு தெருவை சேர்ந்தவர் ஜெயராமன் வயது 61. இவர் சனிக்கிழமை அன்று இரவு 11-45 மணியளவில் கரூர் - கோவை சாலையில் டூவீலரில் பரமத்தி பவர் கிரிட் அருகே சென்றபோது அதே சாலையில் தஞ்சாவூர் வலசை உதயநாடு கருப்ப தேவன் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் ஓட்டி வந்த கார் ஜெயராமன் ஓட்டி சென்ற டூவீலரின் பின்னால் மோதி சம்பவ இடத்தில் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு துடிதுடித்து ஜெயராமன் உயிரிழந்தார். சம்பவம் குறித்து ஜெயராமன் மருமகன் பாலகிருஷ்ணன் அளித்த புகாரில் பரமத்தி காவல்துறையினர் விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story





