ஜெர்மனி, இங்கிலாந்து பயணம் மேற்கொண்டு நாடு திரும்பிய முதல்வருக்கு அமைச்சர் வரவேற்பு!

X
ஜெர்மனி, இங்கிலாந்து பயணம் மேற்கொண்டு நாடு திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் கீதாஜீவன் வரவேற்றார். 'தமிழ்நாடு வளர்கிறது' (டி.என்.ரைசிங்) என்ற பயணத்தின் கீழ் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 30-ந்தேதி சென்னையில் இருந்து ஜெர்மனிக்கு புறப்பட்டார். அங்கு அவர், முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார். மேலும் அவர் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி, ஜெர்மனியை சேர்ந்த நிறுவனங்களுடன் 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு தமிழ்நாட்டுக்கு ரூ.7 ஆயிரத்து 20 கோடி முதலீடுகளை ஈர்த்தார். பின்னர் ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு கடந்த 2-ந்தேதி இங்கிலாந்து சென்றார். லண்டனில் முதலீட்டாளர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது 7 நிறுவனங்களுடன் ரூ.8 ஆயிரத்து 496 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தின்போது தமிழ்நாட்டுக்கு மொத்தம் ரூ.15 ஆயிரத்து 516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இதன் மூலம் 17 ஆயிரத்து 613 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தை நிறைவு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழகம் திரும்பினார். காலை 8.45 மணியளவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார். அவருக்கு கனிமொழி எம்பி, அமைச்சர்கள் கீதாஜீவன், துரைமுருகன், மற்றும் திமுக நிர்வாகிகள் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதுகுறித்து அமைச்சர் கீதாஜீவன வெளியிட்ட பதிவில், "ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்று உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றியதுடன், தமிழ்நாட்டிற்கு 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் 15,516 கோடி தொழில் முதலீடுகளை ஈர்த்து வெற்றிகரமாக தாயகம் திரும்பியுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை விமான நிலைய அண்ணா பன்னாட்டு முனையத்தில் வரவேற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Next Story

