மதுராந்தகம் அருகே பாக்கம் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் சாலை மறியல்

X
மதுராந்தகம் அருகே பாக்கம் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் சாலை மறியல் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள பாக்கம் ஊராட்சியில் இருந்து தாதங்குப்பம் என்ற கிராமத்திற்கு ஏரிக்கரை மீது கனிம வள நிதிலிருந்து சுமார் 40 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதை தாதங்குப்பம் பகுதியை சேர்ந்த தனிநபர் வேலையை நிறுத்தியதால் பாக்கம் கிராம மக்கள் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை மறியல் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நெடுஞ்சாலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் போக்குவரத்து தடைப்பட்டது சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை ஆய்வாளர் சாலை மறியல் ஈடுபட்டவர்களிடம் சாலை போடும் பணியை தடுத்து நிறுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் மேலும் சாலை பணி தடை இன்றி நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
Next Story

