தங்கம் விலை புதிய உச்சம்!ஏழை எளிய மக்கள் ஒரு குண்டு மணியாவது வாங்கும் வகையில் விலையை குறைக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! கொங்கு ஈஸ்வரன் மத்திய அரசுக்கு வேண்டுகோள்

தங்கம் விலை புதிய உச்சம்!ஏழை எளிய மக்கள் ஒரு குண்டு மணியாவது வாங்கும் வகையில் விலையை குறைக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! கொங்கு ஈஸ்வரன் மத்திய அரசுக்கு வேண்டுகோள்
X
இந்திய நாட்டின் ஏழை எளிய மக்களின் நலன் கருதி தங்கத்தினுடைய விலையை குறைத்து கட்டுக்குள் கொண்டு வர இந்திய அரசு தக்க நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் 80 ஆயிரத்தைக் கடந்த நிலையில் மக்கள் அதிர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.இதுகுறித்து கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் எம்எல்ஏ மத்திய அரசுக்கு தங்கத்தின் விலையை குறைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது....தங்கம் விலை தினம் தினம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. இதேபோன்று தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தால் ஏழை எளிய மக்கள் தங்கம் வாங்குவது என்பது எட்டாக்கனியாக போய்விடும். விசேஷ நாட்கள் மற்றும் இல்ல திருமண நிகழ்ச்சி போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு ஏழை எளிய மக்கள் தங்கம் வாங்க வேண்டும் என்பது ஒரு பெரிய கனவாக இருந்து வருகிறது ஆனால் இப்போது தங்கம் விலை உயர்வால் அது சாத்தியமில்லாத நிலையை எட்டியிருக்கிறது. இந்திய குடும்பங்களில் சிறிய அளவிலாவது தங்கம் வாங்க வேண்டுமென்பது கட்டாயமான ஒரு நிகழ்வாக இருக்கிறது. தங்கம் விலை உயர உயர பதுக்கல்காரர்களும் அதிகமான தங்கத்தை புழக்கத்திலிருந்து எடுத்து பதுக்கவும் வாய்ப்புகள் அதிகமாகும். தங்கம் விலை உயர்வால் அதிகமாக பாதிக்கப்படுவது இந்தியாவின் ஏழை எளிய மக்கள் தான். எவ்வளவு விலை உயர்ந்தாலும் பணத்தை கடனாக அதிக வட்டி கொடுத்து வாங்கியாவது அத்தியாவசிய தேவைக்கு தங்கம் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்படுகிறார்கள். தங்கம் விலை இதேபோன்று தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்றால் பணக்காரர்கள் மட்டுமே வாங்கக்கூடிய ஒரு பொருளாக மாறிவிடும். இந்திய நாட்டின் ஏழை எளிய மக்களின் நலன் கருதி தங்கத்தினுடைய விலையை குறைத்து கட்டுக்குள் கொண்டு வர இந்திய அரசு தக்க நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்
Next Story