நம்பெரு மாள் உபயநாச்சியார்களுடன் நேற்று நெல்லளவு கண்டருளினார்.

நம்பெரு மாள் உபயநாச்சியார்களுடன் நேற்று நெல்லளவு கண்டருளினார்.
X
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பவித்ர உற்சவத்தையொட்டி நம்பெரு மாள் உபயநாச்சியார்களுடன் நேற்று நெல்லளவு கண்டருளினார். நாளை தீர்த்தவாரி கண்டருளுகிறார்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி-புரட்டாசி மாதத்தில் பவித்ர உற்சவம் எனப்படும் நூலிழைத் திருநாள் 9 நாட்கள் வெகுவிமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான பவித்ர உற்ச வம் கடந்த 3-ந்தேதி தொடங்கி நாளை (வியாழக்கிழமை) வரை நடை பெறுகிறது. இந்த உற்சவத்தை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, தங்கக் கொடிமரத்தின் அருகில் உள்ள பவித்ர உற்சவ மண்டபத்தில் எழுந்த ருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பவித்ரோத்சவத்தின் 7-ம் நாளான நேற்று நம்பெருமாள் உபயநாச்சி யார்களுடன் திருச்சிவிகையில் மூலஸ்தானத்தில் இருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு கோவில் திருக்கொட்டாரத்தில் இரவு 7 மணிக்கு நெல்லளவு கண்டருளினார். பின்னர் தாயார் சன்னதியில் திருவந்திக் காப்பு கண்டருளி இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
Next Story