மூதாட்டியிடம்தங்கச்சங்கிலி பறிப்பு

X
துவரங்குறிச்சி பொன்னம்பட்டியை சேர்ந்தவர் செல்லம்மாள் (60). இவர் நேற்று மாலை பொன்னம்பட்டி அருகே உள்ள சடவேலாம்பட்டி சாலையில் ஆடுகளை மேய்த்தார். அப்போது அந்த வழியாக இருசக் கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தபடியே வந்த 2 மர்ம நபர்கள், இப்பகுதியில் சாமி பார்க்கும் இடம் உள்ளதா என்று அவரிடம் கேட்ட வாறு அருகில் வந்து, அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர். இதையடுத்து மணப்பாறை துணை சூப்பிரண்டு காவியா மற்றும் துவரங்குறிச்சி போலீசார் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் மூதாட்டியிடம் நடந்தவற்றை கேட்டறிந்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு மர்மநபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
Next Story

