குமரி : ஓய்வு பெற்ற அதிகாரியின் வீட்டில் திருட்டு

X
குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள பரக்கைசிடிஎம்புரம் சேர்ந்த திவாகர் (65), நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று காலை மனைவியுடன் மருத்துவமனைக்குச் சென்ற அவர், மதியம் வீடு திரும்பியபோது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த திவாகர் சுசீந்திரம் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார் புகாரின் பேரில் சுசீந்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர் பின்பு வீட்டிற்கு சென்று பார்க்கும் போது வீட்டின் பீரோவில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் மற்றும் உண்டியலில் சேமித்திருந்த 40 ஆயிரம் ரூபாய் உட்பட மொத்தம் 90 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
Next Story

