கழுகாசலமூர்த்தி மலையில் பவுர்ணமி கிரிவலம்!

கழுகாசலமூர்த்தி மலையில் பவுர்ணமி கிரிவலம்!
X
கழுகாசலமூர்த்தி மலையில் பவுர்ணமி கிரிவலம் : திரளான பக்தர்கள் வழிபாடு
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் நேற்று முன்தினம் ஆவணி பவுர்ணமியையொட்டி காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் சென்றனர். பின்னர் சந்திரகிரகணத்திற்காக மதியம் 2 மணி முதல் கோவில் நடை சாத்தப்பட்டது. இரவு வரை கோவில் திறக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் யாரும் கிரிவலம் செல்லவில்லை. இந்நிலையில் நேற்று சந்திரகிரகணம் முடிந்த நிலையில் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு காலை 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை மற்றும் காலசந்தி பூஜைகள் நடந்தது. காலை 7 மணியளவில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணியளவில் திரளான பக்தர்கள் கோவில் முன்பிருந்து கிரிவலம் புறப்பட்டனர். இதை கோவில் பவுர்ணமி கிரிவல குழு தலைவர் மாரியப்பன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து திரளான பக்தர்கள் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!’ என்ற கோஷத்துடன் மலையை சுற்றி கிரிவலம் சென்றனர். இரவு 7 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் கழுகுமலை மட்டுமன்றி சுற்றியுள்ள 20- க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story