பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய எம்எல்ஏ

X
செங்கல்பட்டு மாவட்டம்,வேங்கடமங்கலம் ஊராட்சியில் நடைப்பெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் தொடக்கி வைத்து முகாமினை பார்வையிட்டார். அப்போது பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு தீர்வுகாண பரிந்துரை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டசத்து பெட்டகம், முதியோருக்கு மருத்துவ பெட்டகங்கள் உள்ளிட்டவற்றை பயனாளிகளுக்கு வழங்கினார். காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன்,துணைத்தலைவர் AVM.இளங்கோவன்,முகாம் மேற்பார்வையாளர் வேளாண்மை பொறியியல்துறை மாவட்ட உதவி செயற்பொறியாளர் பிரின்ஸ் முத்துராஜ் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன்,மீனாட்சி,ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணி இரவி ஒன்றிய கவுன்சிலர்,துணைத்தலைவர்,துறைச் சார்ந்த அதிகாரிகள் ,ஊழியர்கள், கழக நிர்வாகிகள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.
Next Story

