புனித ஆரோக்கிய அன்னை திருவிழா தேர்பவனி

X
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் புதுமைநகர் புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கடந்த ஆக.30-ந் தேதி பல்வேறு நகரங்களில் இருந்து வந்திருந்த பங்குத் தந்தைகளின் சிறப்பு ஆராதனைகளுடன் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் திருப்பலி, மறையுரை சிந்தனைகள், சிறப்பு ஆராதனைகள், நற்கருணை ஆசீர், அசன விருந்து மற்றும் சப்பர பவனி நடைபெற்றது. திருவிழாவின் 10-ம் நாளான நேற்று அதிகாலை 5 மணி அளவில் பங்குத்தந்தை எரிக்ஜோ தலைமையில் மறையுரை நடைபெற்றது. சிறப்பு வழிபாட்டுக்கு பின்பு ஆலயம் முன்பிருந்து அலங்கரிக்கப்பட்ட தேர் பவனி தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பல்வேறு மதத்தை சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்றனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக தேர்பவனி நடந்தது. வழிநெடுகிலும் ஏராளமான கிறிஸ்தவர்களும், மாற்று மதத்தினரும் திரண்டிருந்து அன்னைக்கு உப்பு, மிளகு ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர்.
Next Story

