பத்திர பதிவு அலுவலகம் முன்பு ஜமாத் போராட்டம் 

  பத்திர பதிவு அலுவலகம் முன்பு ஜமாத் போராட்டம் 
X
வேர்கிளம்பி
குமரி மாவட்டம் வேர்க்கிளம்பி அருகே ஜமா அத்துக்கு சொந்தமான 4 ஏக்கர் 87 சென்று நிலம் உள்ளது. கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி சார் பதிவாளர் விடுப்பு எடுத்த நாளில் அன்று பொறுப்பு சார் பதிவாளராக இருந்தவர் தனிநபர் ஒருவர் பெயருக்கு அந்த நிலத்தை பதிவு செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதை கண்டித்து திருவிதாங்கோடு ஜமா அத் நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமியர்கள் இணைந்து நேற்று சார் பதிவாளர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டனர். ஜமாத் தலைவர் அன்வர் உசேன் தமிழ் தலைமையில்  ஏராளன இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story