கிருஷ்ணகிரி:டீக்கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை.

X
கிருஷ்ணகிரி பாரதியார் நகரை சேர்ந்தவர் முகமது ரபிக் (48) டீக்கடை நடத்தி வருகிறார். இவர் பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்ப டுகிறது. இதனால் கடன் கொடுத்தவர்கள் இவரிடம் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்த முகமது ரபிக் கடந்த 10-ஆம் தேதி அன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக் கண்டு அக்கம் பக்கத்தினர்.போலீசா ருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

