சீதாராம் யெச்சூரி முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி

X
Komarapalayam King 24x7 |13 Sept 2025 5:45 PM ISTகுமாரபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நகர குழு சார்பில் சீதாராம் யெச்சூரி முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குமாரபாளையம் நகர குழு சார்பில் சீதாராம் யெச்சூரி முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நகர குழு செயலாளர் கந்தசாமி தலைமையில் ஆனங்கூர் பிரிவு சாலை பகுதியில் நடந்தது. இதில் சீதாராம் யெச்சூரி திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிர்வாகிகள் பலரும் சீதாராம் யெச்சூரியின் சாதனை பணிகள் குறித்து நினைவு கூர்ந்து பேசினார்கள். இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன், மாவட்ட குழு உறுப்பினர் சக்திவேல், முன்னாள் நகர செயலாளர் ஆறுமுகம், நகர குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் பங்கேற்றனர்.
Next Story
