ஆசியா துப்பாக்கிச் சூடும் போட்டி தங்கப்பதக்கம் என்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா

ஆசியா துப்பாக்கிச் சூடும் போட்டி தங்கப்பதக்கம் என்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா
X
ஆசியா துப்பாக்கிச் சூடும் போட்டி தங்கப்பதக்கம் என்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலந்து கொண்டார்
வெள்ளகோவில் இலக்கமநாயக்கன்பட்டியில், கொங்குநாடு ரைபிள் கிளப் செயல்பட்டு வருகிறது. இங்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த கிளப்பில், திருப்பூரை சேர்ந்த கல்லூரி மாணவி தனிஷ்கா செந்தில்குமார் (வயது 17), கோவையை சேர்ந்த பள்ளி மாணவன் எஸ்.எம்.யுகன் (14) ஆகியோர் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள் கடந்த ஆகஸ்டு மாதம் கஜகஸ்தானில் நடைபெற்ற 16-வது ஆசிய துப்பாக்கி சுடும் சாம்பியன் ஷிப் போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்றனர். இதில் 28 நாடுகளை சேர்ந்த 800 வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டியில், தனிஷ்கா செந்தில்குமார், எஸ்.எம்.யுகன் இருவரும் தனி பிரிவுகளில் தலா 3 தங்கப்பதக்கங்களையும், கலப்பு பிரிவில் ஒரு தங்கப் பதக்கத்தையும் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தனர். இதைத்தொடர்ந்து இவர்களுக்கு கொங்குநாடு ரைபிள் கிளப்பில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு திருப்பூர் போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரிஸ் அசோக் தலைமை தாங்கினார். காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு அர்பிதா ராஜ்புட் முன்னிலை வகித்தார். இதில் சாதனை புரிந்த இருவருக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. பாராட்டு விழா ஏற்பாடுகளை ரைபிள் கிளப்பின் தலைவர், செயலாளர், நிர்வாகிகள் செய்திருந்தனர். மேலும் பதக்கம் பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தனர்.
Next Story