திமிரி:சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுநர் கைது!

X
திமிரியை அடுத்த ஆனைமல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளவரசன் (வயது 30). இவர், திமிரியில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஒன்றில் வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர், கலவையைச் சேர்ந்த 18 வயது சிறுமியிடம் காதலிப்பதாக கூறி தொடர்ந்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வந்தார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறினார். உடனே பெற்றோர் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோ சட்டத்தில் வேன் டிரைவர் இளவரசனை கைது செய்தனர். அவரை, ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story

