ஆலங்குளம் அருகே மூதாட்டி வீட்டில் திருட்டு

X
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பிரதான சாலையில் பேருந்து நிலையம் எதிரே வசிப்பவா் ஜெயா அற்புதமணி (90). ஓய்வு பெற்ற ஆசிரியரான இவா், காலை அருகில் உள்ள தேவாலயத்துக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது வீட்டின் கதவு திறக்கப்பட்டு பீரோவில் இருந்த 8 கிராம் தங்க நகை, ரூ. 5 ஆயிரம் திருடு போயிருந்தது. இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், ஆலங்குளம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகின்றனா்.
Next Story

