கோவை: பழமையான மரம் - உடனடி நடவடிக்கை கோரிக்கை !

கோவை: பழமையான மரம் - உடனடி நடவடிக்கை கோரிக்கை !
X
மரத்தை அழிக்க தடைசெய்யப்பட்ட வேதிப்பொருள் பயன்படுத்தப்பட்டதால் அதிர்ச்சி.
கோவை மாவட்டம் சாய்பாபா கோலனி, என்.எஸ்.ஆர். சாலை பகுதியில் ஒரு பழமையான மரத்தை யாரோ அமிலத்தால் அழித்ததாக புகார்கள் எழுந்துள்ளது. மரத்தை ஊராட்சி மற்றும் மாநகராட்சி பொதுக்கொள்கைகளுக்கு மாறாக அழித்த இந்த செயல் சுற்றுப்புற மக்களுக்கு ஆபத்தானதாகவும், சட்டத்திற்கு மாறானதாகவும் உள்ளது. அனைத்திந்திய மனித உரிமை சங்கம் (கோவை மாவட்டம்) செயலாளர் டி. ராஜா, காவல், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி கமிஷனருக்கு கடிதம் எழுதி, FIR பதிவு செய்து, குற்றவாளிகளை உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார். காட்சி பதிவுகள் முக்கிய சாட்சியமாகக் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. மரத்தை அழித்தவர் மற்றும் அமிலத்தை வழங்கியவர்களை கண்டறிந்து, சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story