தவெக தலைவர் விஜய் தலைமையில் தமிழகத்தில் நிச்சயம் ஒரு கூட்டணி அமையும் அமமுக பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் பேட்டி

X
அரியலூர்,செப்.15- தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில் நிச்சயம் ஒரு கூட்டணி அமையும். அதில் அமமுக இணைவது குறித்து தற்போது சொல்ல முடியாது என்றார் அமமுக பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன். அரியலூரில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்தப் பேட்டி: பாஜக கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக பழனிசாமி இருக்கும் போது நாங்கள் எப்படி கூட்டணியில் இருக்க முடியும். முதல்வர வேட்பாளராக பழனிசாமி இருக்கக்கூடாது என்பது தான் எங்களது கோரிக்கை. அதிலிருந்து மற்றவற்றை புரிந்து கொள்ளுங்கள். விஜய் பிரச்சாரத்தை நானும் தொலைக்காட்சியில் பார்த்தேன். நிறைய இளைஞர்கள், இளம் பெண்கள், 40 வயதுக்கு உட்பட்டவர்கள் திரண்டு வந்திருந்தனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் விஜய் பேசவில்லை. நான் அதை அப்படி பார்க்கவில்லை. இருந்தாலும் ஜெயலலிதா பாணியில் ஒருவர் பேசினால், அது மகிழ்ச்சியானது தான். பெரம்பலூருக்கு விஜய் சென்றது நள்ளிரவு. நள்ளிரவு தாண்டிய பிறகு பிரசாரத்தை ரத்து செய்து தான் ஆக வேண்டும். விஜய் தலைமையில் கூட்டணி உருவாகும் என நான் பலமுறை சொல்லி விட்டேன். அதில் அமமுக இணைவது குறித்து தற்போது சொல்ல முடியாது. விஜய் தலைமையில் ஒரு கூட்டணியும், சீமான் தலைமையில் ஒரு கூட்டணி நிச்சயம் அமையும். தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிச்சயம் உண்டு என்றார்.
Next Story

