கரூர்-நடந்து சென்ற முதியவர் மீது மினி பேருந்து மோதி விபத்து.
கரூர்-நடந்து சென்ற முதியவர் மீது மினி பேருந்து மோதி விபத்து. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா புஞ்சை காளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ் வயது 70. இவர் திங்கள்கிழமை மதியம் 12:20 மணியளவில் கரூர் மினி பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றார். அப்போது திண்டுக்கல் மாவட்டம் டி.கூடலூர் காலனி தெருவை சேர்ந்த யுவராஜ் வயது 35 என்பவர் வேகமாக ஓட்டி வந்த மினி பேருந்து நடந்து சென்ற நடராஜ் மீது மோதி விபத்து ஏற்பட்டது. உடனடியாக அவரை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த நடராஜன் மகள் மேனகா வயது 42 என்பவர் அளித்த புகாரில் விபத்து ஏற்படுத்திய யுவராஜ் மீது கரூர் மாநகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story




