ஊத்தங்கரை:தனியார் மருத்துவமனை டாக்டர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள நொச்சிப்பட்டி பகுதியை சேர்ந்தவர்.விக்னேஷ்(31) டாக்டரான இவர் சொந்தமாக மருத்துவமனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி இரவு பண முடித்து விட்டு தன் அறையில் உறங்க சென்றார். மறுநாள் பணிக்கு வந்த மற்றொரு டாக்டரான சுரேஷ் மருத்துவமனைக்குள் சென்று பார்த்தார். அப்போது டாக்டர் விக்னேஷ் உயிரிழந்து கிடந்தார். மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

