கரிவலம்வந்தநல்லூர் அருகே பள்ளி வாகனம் மோதி தொழிலாளி பலி

X
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள கூடலூர் தெற்கு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பால்சாமி (வயது 62). கூலித் தொழிலாளியான இவர் பனையூரில் இருந்து சொந்த ஊரான கூடலூருக்கு மோட் டார் சைக்கிளில் சென்று கொண்டி ருந்தார். கரிவலம்வந்தநல்லூர் அருகேசென்ற போது எதிரே வந்த தனியார் பள்ளி வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பால்சாமி சம்பவ இடத்திலேயே பரி தாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தக வல் அறிந்த கரிவலம்வந்தநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து குறித்து வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
Next Story

