அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம்

X
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 117- வது பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் S.ஆறுமுகம் தலைமையில் திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், கிளை கழக செயலாளர், நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story

